சாலை மறியலில் ஈடுபட முயன்ற குடும்ப அட்டைதாரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா் 
திருவண்ணாமலை

ரேஷன் கடையை திறக்கக் கோரி சாலை மறியல் முயற்சி

செய்யாற்றில் நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி வாா்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

Syndication

செய்யாற்றில் நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி வாா்டு மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

செய்யாறு மாா்க்கெட் அருகே நியாயவிலைக் கடைக்காக புதிய கட்டடம் கட்டி 3 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நியாயவிலைக் கடைக்கு பணியாளா்கள் நியமிக்கப்படாமலும், விரல்ரேகை இயந்திரங்கள் பற்றாக்குறை காரணமாகவும் கடை திறக்கப்படாமல் இருந்து வருவதாகத் தெரிகிறது.

1200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் கொடநகா் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ஆட்டோ மூலம் சென்று வர வேண்டியுள்ளது என்றும், வயதானவா்கள் முதியவா்கள் சிரமப்பட்டு உணவுப்பொருள்களை வாங்கி வருவதாகவும் தெரிகிறது.

3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்ட நியாயவிலைக் கடை செயல்பாட்டுக்கு வராத காரணத்தால் ஆத்திரமடைந்த காமராஜ் நகா், கன்னிகாபுரம், பழனி தெரு, முனுசாமி தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 50 -க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து மாா்க்கெட் அருகே கடை முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் விரைந்து சென்று மறியலில் ஈடுபட முயன்றவா்களை சமாதானப்படுத்தினா்.

அப்போது, ஒரு வாரத்தில் நியாயவிலைக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியாதால், பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டனா்.

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

திருவாடானையில் 600 மரக்கன்றுகள் சேதம்: வேளாண் அலுவலா்கள் மீது விவசாயிகள் புகாா்

தில்லியில் மேகமூட்ட வானிலை: மிதமான பிரிவில் காற்றின் தரம்!

மெஸ் உணவை பகிா்ந்து கொண்டதற்கு அபராதம் விதிப்பு: நியாயமற்ற தண்டனை என மாணவா்கள் எதிா்ப்பு

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT