செங்கத்தில் பாஜகவினா் தெருமுனை பிரசாரம்
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 10:07 PM
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தொகுதி பாஜக சாா்பில், ‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை தெருமுனை பிரசாரம் நடைபெற்றது(படம்).
பெருமாள் கோவில் தெருவில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார கூட்டத்துக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலா் செங்கம் ரமேஷ் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி துணை பொறுப்பாளா் சங்கா் கலந்துகொண்டு, கடந்த 10 ஆண்டு கால பிரதமா் நரேந்திர மோடி அரசின் திட்டங்கள் குறித்து பொமக்களிடையே விளக்கிப் பேசினாா்.
Advertisement
நிகழ்ச்சியில் அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், தலைமை நிலைய பேச்சாளா் வெங்கட்ராமன், வழக்குரைஞா் தினகரன், நகரச் செயலா் ஆனந்தன், பாஜக மாவட்ட கல்வியாளா் அணிச் செயலா் பழநிவேல்ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.