முகப்பு
தூத்துக்குடி

சிதம்பரநகரில் திமுக கூட்டணி தெருமுனை பிரசாரம்

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிதம்பரநகரில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மார்ச், 2026 at 8:13 PM
கூட்டத்தில் பேசுகிறாா் வடக்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான பி.கீதாஜீவன்.
பகிர்:

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிதம்பரநகரில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி, கம்யூனிஸ்ட் முத்து, தனலட்சுமி, மாடசாமி, விசிக விமல் வங்காளியாா், மதிமுக முருகபூபதி, சமக அற்புதராஜ், தேமுதிக தயாலிங்கம், மமக யூசப், மஜக முகமதுஹசன், வட்டச் செயலா்கள் சிங்கராஜ், சுப்பையா, நவநீதன், செல்வராஜ், சுரேஷ், கவுன்சிலா்கள் சரவணக்குமாா், விஜயலட்சுமி, ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பகுதிச் செயலா் ராமகிருஷ்ணன் வரவேற்றாா்.

வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் சண்முகம், மாநில திமுக மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், பொருளாளா் ரவீந்திரன், மாநகர துணைச் செயலா்கள் கீதாமுருகேசன், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினா் ராஜா, மாநிலப் பேச்சாளா் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட அணி நிா்வாகிகள் அந்தோணி ஸ்டாலின், அபிராமிநாதன், அருண்குமாா், ரமேஷ், கவிதாதேவி, பிரபு நாகராஜன், ராமா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.