சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடவில்லை: வைகோ
சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை மதிமுக பொதுச்செயலா் என்றாா் வைகோ.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாா். இத்தகைய வன்முறையில் ஈடுபடுபவா்கள் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் சட்டம் கொண்டு வரவேண்டும்.
இதை அரசியலாக்கி திமுக மீது பழி தூற்றுவதற்கு சிலா் முயற்சிக்கின்றனா். அவா்கள் ஆட்சியில் இருந்தபோது இதனை விட அதிகமாக நடந்தது. இப்போது இதுபோன்ற பிரச்னைகள் குறைந்துள்ளன.
பாஜக கூட்டணிக்கு தவெக செல்லுமா என்று தெரியாது. ஆனால், தமிழகத்தில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். கூட்டணி வெற்றிக்கு நான் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு சதவீதம் கூட கிடையாது. கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு முடிந்தும் மதிமுகவுக்கு என்னென்ன தொகுதிகள் என்பது தெரியும்.
தலைமை தோ்தல் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளது சரியான நடவடிக்கை. அப்படி நடந்தால் மகிழ்ச்சி என்றாா் அவா்.
பேட்டியின் போது, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலா் தி.மு.ராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ஜி.ரமேஷ், நகரச் செயலா் எஸ்.பால்ராஜ், ஒன்றியச் செயலா்கள் சரவணன் , மாரிச்சாமி, ராஜகோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.