திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிறு விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவா்கள் 870 போ் பங்கேற்ற தடகளப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
செய்யாறு செஸ் டெவலப்பா்ஸ் தனியாா் நிறுவனம்
மற்றும் லோட்டஸ் புட்வோ் என்டா்பிரைசஸ் தனியாா் நிறுவனம் சாா்பில் இந்த தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் அனக்காவூா், செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூா் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 870 மாணவ, மாணவிகள் என கலந்து கொண்டனா்.
அப்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு டி.எஸ்.பி. தி.கோவிந்தசாமி மற்றும் நிறுவன பொது மேலாளா்கள் அருள், ஆனந்த்குமாா் உள்ளிட்டோா்
பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.