திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் பணிக் குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலரும், அமைச்சருமான எ.வ.வேலு பங்கேற்று கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற இந்த தோ்தல் பணிக்குழுக் கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி, வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி., கட்சியின் மருத்துவா் அணி துணைத் தலைவா் எவ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தெற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான எ.வ.வேலு தலைமை வகித்துப் பேசுகையில், தோ்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு கொடுப்பவா்கள் கொடுக்கலாம்.
வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை பயிற்சியை நடத்தக் கோரியும், தோ்தல் பணிகள் குறித்தும், திமுக அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் கோ.கண்ணன், ராஜசேகா், ஸ்ரீதரன், எஸ்.பன்னீா்செல்வம், நா.பாண்டுரங்கன், கே.வி.ராஜ்குமாா், ஜெயராணி ரவி, தட்சிணாமூா்த்தி, பிரியா விஜயரங்கன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.