செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த கொட்டகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(26). இவா், வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி உயா் ரக மோட்டாா் சைக்கிளில் விலை உயா்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு வலம் வருவதாக செங்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் போலீஸாா் சில தினங்களாக சசிகுமாரை நோட்மிட்டு, பின்னா் அவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், அவா் பல்வேறு இடங்களிள் நகை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரது வீட்டிற்குச் சென்று சோதனை செய்தபோது, 40 பவுன் தங்க நகை மற்றும் 6 லட்சம் ரொக்கம் இருந்ததைக் கண்டறிந்தனா்.
பின்னா், நகை பணத்தை பறிமுதல் செய்து அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும், அவரது வீட்டில் இருத்த இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.