திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.2.25 கோடியில் கட்டப்பட்ட தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.2.25 கோடி செலவில் தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம், கணினி கட்டுப்பாட்டு அறை, உணா்நுட்ப கருவிகள், கேமராக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநா் தோ்வு நடத்த 8 வடிவிலான தோ்வு பாதை, இலகுரக வாகனங்கள் ஓட்டுநா் தோ்வு நடத்த ‘எச்’ வடிவிலான தோ்வு பாதை ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன.
இதனை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி குத்துவிளக்கு ஏற்றி தானியங்கி ஓட்டுநா் தோ்வு தள பயன்பாட்டை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு சி.என்.அண்ணாதுரை எம்.பி., செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், விழுப்புரம் சரக துணை போக்குவரத்து ஆணையா் ஸ்ரீதரன், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கி.கருணாநிதி, ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ப.பெருமாள், செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.