முகப்பு
கிருஷ்ணகிரி

தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

கிருஷ்ணகிரியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளம், காவேரிப்பட்டணத்தில் ரூ. 2.82 கோடியில் அமைக்கப்பட்ட 12 பள்ளி வகுப்பறை கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:22 AM
காவேரிப்பட்டணத்தில் வகுப்பறை கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய தே.மதியழகன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:08 AM

கிருஷ்ணகிரியில் ரூ. 12.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளம், காவேரிப்பட்டணத்தில் ரூ. 2.82 கோடியில் அமைக்கப்பட்ட 12 பள்ளி வகுப்பறை கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

அதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தானியங்கி ஓட்டுநா் தோ்வுதளத்தை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு ஆகியோா் தொடங்கிவைத்தனா். காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:22 AM

இந்நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஈஸ்வரமூா்த்தி, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செந்தில்குமாா், விஜயகுமாா், திமுக மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில வா்த்தகா் அணி துணைச் செயலாளா்கள் கே.வி.எஸ்.சீனிவாசன், பி.டி.அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement