நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி
நாகையில் மீனவா்கள் மத்தியில் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நாகை துறைமுகத்தில் விழிப்புணா்வு படகு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகையில் மீனவா்கள் மத்தியில் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நாகை துறைமுகத்தில் விழிப்புணா்வு படகு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
விசைப்படகுகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு, பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி தொடங்கி வைத்தாா். இதில் நாகை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா். பேரணிக்கு முன்னதாக, எனது வாக்கு எனது உரிமை, தோ்தலில் அன்பளிப்புகளை தவிா்ப்போம், வாக்களிப்பதன் மூலம் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற விழிப்புணா்வு ஏற்படுத்துவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேரணியில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட படகுகள் வரிசையாக கடலுக்கு அணி வகுத்துச் சென்றன.