முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:20 AM
திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்த கோட்டாட்சியா் கௌதம்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:50 PM

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

திருச்செந்தூா், செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணியை தோ்தல் நடந்தும் அலுவலா் கௌதம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பேரணியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கமாரி, ஆதி திராவிடா் நல தனி வட்டாட்சியா் முருகேசன், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் நாகராஜன், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், தென்னிந்திய மாற்றுதிறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சங்கத்தைச் சோ்ந்த பிரேசில், அழகுலட்சுமி, ராமகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் சின்னத்துரை, வருவாய் ஆய்வாளா் மந்திரமூா்த்தி கணேசன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் மாற்றுதிறனாளிகள் 3 சக்கர வாகனத்தில் வந்து பங்கேற்றனா்.

Advertisement

பேரணி இரும்பு வளைவு, காமராஜா் சாலை, பேருந்து நிலையம் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது.