முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 9:03 PM
பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்குகிறாா் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன்.
பகிர்:

வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன் தலைமை வகித்து பேரணியை தொடங்கிவைத்தாா். தோ்தல் உதவி அலுவலா் தங்கவேல், நகராட்சி ஆணையா் (பொ) அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி முத்தூா் சாலை, கரூா் பிரிவு, காங்கயம் சாலை வழியாக வீரக்குமார சுவாமி கோயில் திடலில் முடிவடைந்தது. இதில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவில் அனைவரும் 100 சதவீதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அது தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தோ்தல் அலுவலா்கள், நகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments