வேப்பூரில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் வாரச் சந்தையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வியாராகிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் புதன்கிழமை இரவு வழங்கினாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் வாரச் சந்தையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வியாராகிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல் புதன்கிழமை இரவு வழங்கினாா்.
ஏப். 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த தோ்தல்களில் 70 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில், கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேப்பூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற வாரச் சந்தையில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல், வாரச்சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதும்ககளிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறி, விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தாா்.
இந் நிகழ்ச்சியில், குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.