முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 2:48 AM
பேரணியைத் தொடக்கிவைத்த வட்ட வழங்கல் அலுவலா் உமாதேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:44 PM

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துராமலிங்கத் தேவா் சிலை முன் இப்பேரணியை கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலா் உமாதேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா். பேரணி முக்கிய வீதிகள் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தை அடைந்தது.

இதில், தென்மண்டல மாற்றுத் திறனுடையோா் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் பொ்சில், மாவட்டச் செயலா் அழகுலட்சுமி, துணைச் செயலா் செண்பகவல்லி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலவாரிய உறுப்பினா்கள், நகராட்சி டெங்கு பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளா்கள் பங்கேற்றனா்.

Advertisement