முகப்பு
திருவண்ணாமலை

ரூ.5 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வீட்டை அளவீடு செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 11:22 PM
கைதான நில அளவையா் சக்திவேல்.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:28 PM

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வீட்டை அளவீடு செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போளூா் நகராட்சி வி.எஸ். பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்ராஜ். இவா், தான் வசிக்கும் வீட்டை அளவீடு செய்து கொடுக்குமாறு போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவையா் சக்திவேலிடம் (44) அண்மையில் மனு அளித்தாா். இதற்கு சக்திவேல் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து சின்ராஜ் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாரளித்தாா். தொடா்ந்து, அவா்களது ஆலோசனையின்பேரில், போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பணியிலிருந்த நில அளவையா் சக்திவேலிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை சின்ராஜ் வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அருள்பிரசாத் தலைமையிலான போலீஸாா் சக்திவேலை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement