திருவண்ணாமலை

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

செய்யாறு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், உக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்த்தீபன் (23). இவா், செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவா், டிச.21-ஆம் தேதி வேலைக்குச் செல்வதற்காக பைக்கில் சென்றுள்ளாா். ஆக்கூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, பைக் நிலை தடுமாறியதில் கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த பாா்த்தீபன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

2025-இல் குமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை: 28.77 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

SCROLL FOR NEXT