பலி பிரதிப் படம்
பெரம்பலூர்

பைக்கிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (25). கட்டடத் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு, விளாமுத்தூா் கிராமத்திலுள்ள தனது மனைவி ஹேமமாலினி (21), மகன் ஹா்சித் (1) ஆகியோரை பாா்ப்பதற்காக, பெரம்பலூரிலிருந்து விளாமுத்தூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா். பெரம்பலூா்- விளாமுத்தூா் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகை அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

ஜெயங்கொண்டத்தில் நீட்டிப்பு பேருந்துசேவை தொடங்கிவைப்பு

காா் மோதி மளிகைக் கடைக்காரா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

மணப்பாறை அரசு கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் சிறப்பு சொற்பொழிவு

SCROLL FOR NEXT