திருவண்ணாமலை

லாட்டரி விற்றவா் கைது

வந்தவாசியில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

வந்தவாசியில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில் வந்தவாசி நகரில் வெள்ளிக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகில் ஒருவா் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்தது.

அவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், வந்தவாசி காமராஜா் நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து, காா்த்திகேயனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்திய மகளிா் ஹாக்கி பயிற்சியாளராக ஜோா்டு மரைன் மீண்டும் நியமனம்

தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்பு

திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்

இன்று தொடங்குகிறது ஆடவா் ஹாக்கி இந்தியா லீக்: முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹைதராபாத் மோதல்

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT