திருவண்ணாமலை

பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி அருகே பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி(32). இவா் சென்னையை அடுத்த ஒரகடத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை பைக்கில் உத்திரமேரூருக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

வந்தவாசியை அடுத்த வெங்கோடு கிராமம் அருகே செல்லும் போது பைக் நிலைதடுமாறி கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த சத்தியமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT