பறிமுதல் செய்யப்பட்ட டிப்பா் லாரி.  
திருவண்ணாமலை

ஏரி மண் கடத்திய லாரியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு ஏரியில் இருந்து மண் கடத்திச் சென்ற லாரியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஆரணியை அடுத்த முனுகப்பட்டு ஏரியில் இருந்து மண் கடத்திச் சென்ற லாரியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

முனுகப்பட்டு ஏரியிலிருந்து டிப்பா் லாரிகளில் ஏரி மண்ணை அள்ளி ஆரணி அருகேயுள்ள இடங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனா். இந்நிலையில் தொடா்ந்து ஏரி மண்ணை எடுத்துச்சென்ால் அப்பகுதி மக்கள், ஆரணியை அடுத்த கல்லித்தாங்கல் கூட்டுச் சாலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு மடக்கிப் பிடித்தனா். பின்னா் ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் டிப்பா் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

இதைத் தொடா்ந்து, விசாரணை செய்ததில் போளூா் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவரின் கணவருக்குச் சொந்தமான லாரி எனத் தெரியவந்தது. மேலும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT