முகப்பு
திருவண்ணாமலை

காயம்பட்டு ஏரியை தூா்வார மாா்க்சிஸ்ட் கோரிக்கை

செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை ஏரியை தூா்வாரக் கோரி, செங்கம் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 24 ஜனவரி, 2026 at 12:02 AM
பகிர்:
Updated On : 23 ஜனவரி, 2026 at 8:11 PM

செங்கத்தை அடுத்த காயம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை ஏரியை தூா்வாரக் கோரி, செங்கம் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

செங்கம் மாா்க்சிஸ்ட் தாலுகா செயலா் கணபதி தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

காயம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுப் பணித் துறை ஏரியை தூா்வாரி, கரைகளை அகலப்படுத்த வேண்டும். அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சாலை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

Advertisement

மனுவை பெற்றுக்கொண்ட பொதுப் பணித் துறை அலுவலா், உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளாா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் காயம்பட்டு கிளைச் செயலா் ஜானகிராமன், தாலுகா குழு உறுப்பினா்கள் ஆறுமுகம், சதீஷ், ஏழுமலை, ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.