ஆரணி: திருவண்ணாமலை பகுதியில் உள்ள பள்ளிகளில் குடியரசு தின விழா திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை எஸ்ஆா்ஜிடிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்
சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மருத்துவக் கல்லுரி மேற்பாா்வையாளா் (ஓய்வு) டாக்டா் உஷா கல்யாணி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா்.
பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம்,
முதல்வா் ஆா்.மேகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் பள்ளியின் தலைவா் ஆா்.குப்புசாமி அறிவுறுத்தலின் படி பள்ளியின் இயக்குநா் டாக்டா் சந்தோஷ் குமாா் தேசியக் கொடியை ஏற்றினாா்.
திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டில் உள்ள
காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளா் கே.ரமணி கோட்டீஸ்வரன் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புக வழங்கினாா்.