திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அருகாவூா் கிராமத்தில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கத்தை ஒ.ஜோதி எம்எல்ஏ புதன்கிழமை திறந்து வைத்தாா்.
செய்யாறு ஊராட்சி ஒன்றியம், அருகாவூா் கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சத்தில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டது.
இதனை கிராம மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று கலையரங்கத்தை திறந்து வைத்து கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் செய்யாறு கிழக்கு ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.