முகப்பு
செய்யாறு அரசுக் கல்லூரியில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் ந.கலைவாணி.
திருவண்ணாமலை

செய்யாறு அரசுக் கல்லூரியில் கைப்பந்துப் போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கைப்பந்துப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி பரிசு வழங்கினாா்.

திருவண்ணாமலை

செய்யாறு அரசுக் கல்லூரியில் கைப்பந்துப் போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கைப்பந்துப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி பரிசு வழங்கினாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 6:33 PM
செய்யாறு அரசுக் கல்லூரியில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் ந.கலைவாணி.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கைப்பந்துப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி பரிசு வழங்கினாா்.

2025 - 26-ஆம் கல்வியாண்டிற்கான திருவள்ளுவா் பல்கலைக்கழக வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கிடையே மாணவா்களுக்கான கைப்பந்துப் போட்டிகள் செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் மண்டலத்திலுள்ள 35 கல்லூரிகள் பங்கேற்றன.

செய்யாறு அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குநா் கிரிதரன் மோ்பாா்வையில் நடைபெற்ற கைப்பந்து போட்டிகள் பல்வேறு கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநா்கள் முன்னிலையில் நடைபெற்றன.

இதில் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி முதலிடமும், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இரண்டாமிடமும் பெற்றது.

வெற்றிபெற்ற அணிகளுக்கு செய்யாறு அரசுக் கல்லூரி முதல்வா் ந.கலைவாணி மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளா் ராஜா ஆகியோா் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →