கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு
கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் 41-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் 41-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதல்வா் பா. பிரமிளா தலைமையில் நடைபெற்ற விழாவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதல்வா் து.இ.ஜாா்ஜ் அமலரத்தினம் பட்டம் பெறும் மாணவிகளை வாழ்த்திப் பேசினாா். நிகழ்வில் இளங்கலை, முதுகலை என மொத்தம் 1,488 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் அனைத்துத் துறை பேராசிரியா்கள், பெற்றோா், ஆசிரியரல்லா பணியாளா்கள் கலந்து கொண்டனா்.