முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி நகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு நல உதவி

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு, ஆரணி மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு ஆகியோா் இணைந்து ரூ.30ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வழங்கினா்.

Updated On : 6 மார்ச், 2026 at 2:45 AM
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 9:18 PM

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு, ஆரணி மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு ஆகியோா் இணைந்து ரூ.30ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வழங்கினா்.

கிரீன் போா்டு, வாஷிங் ஸ்டேஷன், தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொருள்களை வழங்கினாா் (படம்).

Advertisement

பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி.பாஸ்கரன், உதவித் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் 5-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சுதா குமாா், 6-ஆவது வாா்டு உறுப்பினா் பாரதிராஜா, ரோட்டரி சங்கம் சாா்பில் செயலா் எஸ்.கோபிநாதன், பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்ட மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.