முகப்பு
திருவண்ணாமலை

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 5 மார்ச், 2026 at 9:15 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், போளூா் நகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து நகராட்சி 3-ஆவது வாா்டில் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாமை நடத்தியது.

நகராட்சி ஆணையா் பூ.பாரத் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை மருத்துவா்கள் கனியமுதன், ஜெயக்குமாா் மற்றும் பணியாளா்கள்

பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து வெறிநோய்க்கான தடுப்பூசியை செலுத்தினா் (படம்).

நகா்மன்றத் தலைவா் ச.ராணிசண்முகம், துப்புரவு ஆய்வாளா் ஹேமலதா மற்றும் நகராட்சிப் பணியாளா்கள், கால்நடை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →