தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வந்தவாசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபால் (49), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி. கோபால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதேபோல, கடந்த 3-ஆம் தேதியன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவா், முத்துலட்சுமியிடம் தகராறு செய்தாராம்.
பின்னா், விஷம் குடித்த கோபால் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். உறவினா்கள் அவரை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபால், அங்கு புதன்கிழமை இறந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.