விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை
போடி அருகே பெண் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே நாகலாபுரம் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி ஜானகி (52). கேரளத்தில் தோட்ட வேலைக்குச் சென்று வந்தாா். கடந்த ஒரு ஆண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை விஷம் குடித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.