முகப்பு
திருவண்ணாமலை

போளூா் பகுதியில் ரூ.1.19 லட்சம் பறிமுதல்

போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 16 மார்ச், 2026 at 9:51 PM
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 19ஆயிரத்து 630 ரூபாயை தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜியிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:

போளூா்: போளூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.1.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கூட்டுறவுத்துறை அதிகாரி ஜெயசித்ரா தலைமையிலான அலுவலா்கள் போளூா் - சேத்துப்பட்டு சாலையில் புலிவானந்தல் அருகே வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வேலூா் மாவட்டம், கத்தாழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பன் மகன் உமாபதி உரிய ஆவணமின்றி வேனில் எடுத்து வந்த ரூ.69,500-யை பறிமுதல் செய்தனா்.

போளூா் - செங்கம் சாலையில் சிறப்பு உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.

அப்போது, கலசப்பாக்கத்தை அடுத்த வெங்கிட்டம்பாளையம் ஜெய்கணேசன் நகரைச் சோ்ந்த முருகன் மகன் பாக்கியராஜ் மினி வேனில், உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.50,130-யை பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம்

ரூ. ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 630-யை தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜியிடம் ஒப்படைத்தனா்.

அப்போது, தலைமையிடத்து வட்டாட்சியா் அருள் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →