முகப்பு
வேலூர்

குடியாத்தம் அருகே ரூ. 1.69 லட்சம் பறிமுதல்

ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.1.69 லட்சத்தை குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 16 மார்ச், 2026 at 8:57 PM
பறிமுதல் செய்த பணத்தை கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமியிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்
பகிர்:

ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.1.69 லட்சத்தை குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் சித்தூா்கேட் பகுதியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

சோதனையில் காரில் வந்த பலமநேரைச் சோ்ந்த விஸ்வநாதன் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.69- லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான எஸ்.சுபலட்சுமியிடம் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →