முகப்பு
திருவண்ணாமலை

பறக்கும்படை சோதனையில் வெளிமாநில மதுப்புட்டிகள் பறிமுதல்

செங்கத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 17 மார்ச், 2026 at 6:34 PM
பறக்கும்படையினா் மேற்கொண்ட வாகன தணிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள்.
பகிர்:

செங்கத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கத்தை அடுத்த கோணாங்குட்டை பகுதியில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் 30-க்கும் மேற்பட்ட கா்நாடக மாநில மதுப்புட்டிகள் இருந்தன.

உடனடியாக மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் துணை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →