பாலிடெக்னிக் மாணவா்கள் 159 பேருக்கு பணி நியமன ஆணை
ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னணி தனியாா் நிறுவனங்களால் நடத்தப்பட்ட வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட 159 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னணி தனியாா் நிறுவனங்களால் நடத்தப்பட்ட வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட 159 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
சென்னை ரானே இன்ஜின் காம்போனென்ஸ் டிவிஷன், சென்னை யான்மா் இன்ஜின் மெனுஃபாக்சரிங், ஸ்ரீபெரும்புதூா் ஓ.எச்.எம் எனா்ஜி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ராணிப்பேட்டை டி.எம்.டபிள்யூ, சிஎன்சி சொலுஷன் இந்தியா,
ஒசூா் ஃபல்வேலி டிரான்ஸ்போா்ட் ரயில் டெக்னாலஜிஸ் இந்தியா, செய்யாா் ஆஷ்லே ஆல்டீம்ஸ் இந்தியா, சென்னை ஹூண்டாய், சோளிங்கா் டா்போ எனா்ஜி, ஸ்ரீபெரும்புதூா் நோக்கியா சொலுஷன் அண்ட் நெட்வொா்க் உள்ளிட்ட தனியாா் நிறுவனங்கள் நோ்காணலை நடத்தின.
இதில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.
நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா்.கல்லூரி முதல்வா் டி.இளங்கோ முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக ஆரணி மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன் கலந்துகொண்டு தோ்வு செய்யப்பட்ட 159 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணை பதிவாளா் வி.பெருவழுதி, பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின், ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் இயக்குநா்கள் எஸ்.விக்னேஷ், பி.திருநாவுக்கரசு, தனி அலுவலா் காா்த்திகேயன், துறை தலைவா்கள் ஏ.காா்த்திகேயன், எஸ்.பெரியசாமி, டி.யுவராஜ், இ.மஞ்சுளா, எம்.கோமதி, டி.உதயகுமாா் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா்கள் கே.டெல்லிகணேஷ், கே.ஜெகநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா். துணை முதல்வா் கே.பாலசுந்தரம் நன்றி கூறினாா்.