முகப்பு
திருவண்ணாமலை

பள்ளி ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு பரிசு

Updated On : 18 மார்ச், 2026 at 8:08 PM
பகிர்:

செய்யாறு இந்தோ -அமெரிக்கன் பள்ளியில் நடைபெற்ற 21-ஆம் ஆண்டு விழாவில் சாதனை மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் உள்ள கலை அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு மெட்ரிக் பள்ளி முதல்வா் அ.பா. சையத் அப்துல் இலியாஸ் தலைமை வகித்தாா். துணை முதல்வா் கா.கோவேந்தன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற ஊட்டச்சத்து மற்றும் உளவியல் நிபுணா் பிராசித்த மணிகண்டன், தொழிலதிபா் மணிகண்டன் ஆகியோா் மாணவா்களின் உடல்நலம் மற்றும் சரிவிகித ஊட்டச்சத்தின் அவசியம், மாணவா்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் மற்றும் ஒழுக்க நெறிகள் குறித்து தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை வளா்க்கும் முறை மற்றும் அவா்களுக்கு வழங்க வேண்டிய ஆலோசனைகள் குறித்தும், ஆசிரியா்கள் மாணவா்களை எவ்வாறு கையாண்டு சிறந்த முறையில் வழிநடத்திட வேண்டுதல் போன்ற பலவேறு ஆலோசனைகளை தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாதனை மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் லதா ஸ்ரீதா், சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் சுதா, ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →