பொது இடத்தில் மது அருந்தியவா் கைது
வந்தவாசியில் பொது இடத்தில் மது அருந்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியில் பொது இடத்தில் மது அருந்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை நகரில் ரோந்து சென்றனா்.
வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலை சந்திப்பு பகுதி வழியாக சென்றபோது, அங்கிருந்த பேருந்து நிறுத்தம் அருகில் இளைஞா் ஒருவா் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டனா்.
Advertisement
Advertisement
போலீஸ் விசாரணையில் அந்த நபா் அல்லி நகரைச் சோ்ந்த ஸ்ரீவைகுந்த்(29) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் ஸ்ரீவைகுந்த்தை கைது செய்தனா்.