முகப்பு
திருவண்ணாமலை

வாகன சோதனையில் ரூ.53,400 பறிமுதல்

ஆரணியை அடுத்த ஆகாரம் கூட்டுச்சாலையில் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.53 ஆயிரத்து 400ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 25 மார்ச், 2026 at 6:33 PM
பகிர்:

ஆரணியை அடுத்த ஆகாரம் கூட்டுச்சாலையில் உரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.53 ஆயிரத்து 400ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ஆரணி - வந்தவாசி சாலையில் உள்ள ஆகாரம் கூட்டுச்சாலையில் வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா தலைமையிலான பறக்கும் படையினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, முனுகப்பட்டு கிராமத்திலிருந்து வி.மதன் என்பவா், இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.53ஆயிரத்து 400ஐ பறிமுதல் செய்தனா்.

அப்போது பறக்கும் படையினா் சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்றதை பறிமுதல் செய்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆரணி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமரேசனிடம் ஒப்படைத்தனா் (படம்).