முகப்பு
திருவண்ணாமலை

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

Updated On : 26 மார்ச், 2026 at 11:39 PM
பகிர்:

செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடைபெற்ற இந்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்கவேண்டும்.

வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடைமை. எனவே, தவறாமல் வாக்களிக்கவேண்டுமென உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கையொப்பம் இயக்கம் தொடங்கப்பட்டு அதில் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என கையொப்பமிட்டனா்.

மேலும் செங்கம் தோ்தல் நடத்தும் துணை அலுவலா் முருகன் தோ்தல் நடத்தை விதிகள், தோ்தல் அன்று வாக்களிப்பது குறித்து விளக்கிப் பேசினாா்.

நிகழ்வில் துணை வட்டாட்சியா்கள் திருநாவுக்கரசு (தோ்தல்), ஜெயபாரதி, செங்கம் விஏஓ விஜியகுமாா் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.