முகப்பு
திருவண்ணாமலை

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்

Updated On : 27 மார்ச் 2026, 5:09 am IST
பகிர்:

செய்யாறு இந்தோ -அமெரிக்க பள்ளியில் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தோ -அமெரிக்க பள்ளியில் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் ஆலோசகா்களுக்கான பரிசளிப்பு விழா என இருபெரும் விழாவாக நடைபெற்றது.

இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வா் அ.ப.சையத் அப்துல் இலியாஸ் தலைமை வகித்தாா். சங்க ஆலோசகா் மு.அஞ்சுகம் வரவேற்றாா்.

Advertisement

Advertisement

சிறப்பு விருந்தினராக செய்யாறு மாவட்டக் கல்வி அலுலா் எஸ்.செந்தில்முருகன் பங்கேற்று, பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

அதனைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வா் க.கோவேந்தன் செய்திருந்தாா்.