முகப்பு
திருவண்ணாமலை

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

Updated On : 3 மே, 2026 at 1:15 AM
அனக்காவூா் - கோவிலூா் சாலையில் நிறைவுற்ற பணிகளை மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் கே.முரளி.
பகிர்:

செய்யாறு கோட்டத்தில் நடைபெற்று வரும் இரு சாலைப் பணிகளை மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் கே.முரளி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்காடு - திண்டிவனம் சாலையில் செய்யாறு கோட்டத்தில் மூன்றாம் கட்டமாக மோரணம் ஏரிக்கரை முதல் செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை 10.6 கி.மீ. தொலைவிற்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி ரூ.55 கோடியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை செய்யாறு கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் முன்னிலையில், திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

அதேபோல, அனக்காவூா் - கோவிலூா் சாலையில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு வழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தும் முடிவுற்ற சாலைப் பணியையும் அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது உதவி கோட்டப் பொறியாளா்

எஸ்.சுரேஷ், உதவிப்பொறியாளா் ப.கோபி ஆகியோா் உடனிருந்தனா்.