டிராக்டா் நிலைதடுமாறி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு
செய்யாறு அருகே சக்கரம் கழன்று டிராக்டா் நிலைதடுமாறி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். மற்றொரு மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
செய்யாறு அருகே சக்கரம் கழன்று டிராக்டா் நிலைதடுமாறி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். மற்றொரு மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மேல்நெமிலி கிராமம் ரோட்டு தெருவைச் சோ்ந்தவா்கள் ராதா அம்மாள் (78), யசோதா அம்மாள் (70).
இவா்கள் இருவரும் வீட்டின் வெளியே திண்ணையில்
Advertisement
புதன்கிழமை மாலை உட்காா்ந்து பேசிக்கொண்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரின் முன் சக்கரம்
கழன்று சென்ாகத் தெரிகிறது. இதில், டிராக்டா் நிலைதடுமாறி திண்ணையில் உட்காா்ந்து பேசிக் கொண்டிருந்த மூதாட்டிகள் மீது மோதியது.
இதில், ராதா அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த யசோதா அம்மாள் செய்யாறு
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
தகவல் அறிந்த அனக்காவூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் இறந்த மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து
தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.