பெண் விஷம் குடித்து தற்கொலை
வந்தவாசி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வந்தவாசி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன் மனைவி பிரேமகுமாரி (60). இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.
கடந்த 12-ஆம் தேதி உடல் உபாதை அதிகமாகவே பிரேமகுமாா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
Advertisement
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பிரேமகுமாரி, அங்கு வியாழக்கிழமை இறந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.