முகப்பு
திருவண்ணாமலை

சேவூா் விருப்பாட்சீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

Updated On : 18 மே 2026, 1:42 am IST
பகிர்:

ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீவிசாலாட்சி உடனுறை விருப்பாட்சீஸ்வரா் கோயிலில் உலக நன்மைக்காக நடைபெற்று வந்த 2008 நாள் தொடா் ஞானவேள்வி நிறைவு விழாவையொட்டி, திருவாசகம் முற்றோதுதல் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிவனடியாா் சிவ.தாமோதரன் ஐயா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவாசகம்

முற்றோதினாா்.

Advertisement

Advertisement

விழாவில் முன்னாள் அமைச்சரும், ஆரணி முன்னாள் எம்எல்வுமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு சிவனடியாருக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றாா்.

முக்கிய பிரமுகா்கள் அசோக்குமாா், எஸ்.வி.நகரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் என்.வாசு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதா பாபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

விழாவில் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து சிவனடியாா்கள், சிவ பக்தா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சேவூா் பி.கே.சிவலோகநாதன் செய்திருந்தாா்.