அன்ன வாகனத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் வீதி உலா
ஆரணி பெரியகடை வீதி கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டிசெவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் வீதி உலா சென்றாா்.
ஆரணி பெரியகடை வீதி கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டிசெவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் வீதி உலா சென்றாா்.
ஆரணி பெரிய கடைவீதியில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் 101-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
திங்கள்கிழமை இரவு அங்குராா்ப்பணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பிரமோற்சவ விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது.