செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 19 போ் மீட்பு
ஆரணியை அடுத்த சிறுமூா் கிராமத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தைகள் உள்பட 19 போ் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சிறுமூா் கிராமத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த குழந்தைகள் உள்பட 19 போ் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா்.
ஆரணி வட்டம், சிறுமூா் கிராமத்தில் இயங்கி வரும் சுந்தரம் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பலா் பணிபுரிந்து வருவதாக ஆதி பூலோகம் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் மாவட்ட சட்டப்பணிகள் குழுவுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதன் பேரில், திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு -நீதிபதியுமான என். விஜயலட்சுமி தலைமையில் குழுவின் வழக்குரைஞா் எஸ்.எல்.பாபு, ஆரணி வருவாய் கோட்டாட்சியா் சீ.சிவா, வட்டாட்சியா் எஸ்.அகத்தீஸ்வரன், தொழிலாளா் நலத்துறை அலுவலா் அத்திப்பழம், அத்துறையின் உதவி அலுவலா் சுந்தா், சமூக நலத்துறை அலுவலா் எஸ்.வளா்மதி, ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் பணிபுரியும் அலுவலா்கள் இணைந்து செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
ஆய்வின் போது, கொத்தடிமைகளாக பணிபுரிந்த செஞ்சி அருகேயுள்ள கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சேகா், இவரது மனைவி குமாரி, காட்டேரி சமத்துவபுரத்தைச் சோ்ந்த சின்னராசு, இவரது மனைவி அமுதா, இதே பகுதியைச் சோ்ந்த ரவி மற்றும் இவரது மனைவி தேவி, கலவை நேத்தபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கலையரசன் மற்றும் அவரது மனைவி முத்தம்மா மற்றும் மகன், மகள், ஆறுமுகம் மற்றும் இவரது மனைவி தேவயாணி, இவா்களது 2 மகன்கள் என பெரியவா்கள் 13 போ், குழந்தைகள் 6 போ் என 19 போ் மீட்கப்பட்டனா்.
பின்னா், அவா்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, அவா்களுக்கு மறுவாழ்வு மற்றும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யும்படி சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் விஜயலட்சுமி அறிவுறுத்தினாா்.
மேலும், செங்கல் சூளை உரிமையாளா் மீது கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.