முகப்பு
திருவண்ணாமலை

நாக வாகனத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் வீதியுலா

ஆரணி பெரியகடை வீதி ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோயில் 101-ஆம் ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு சுவாமி நாக வாகனத்தில் வீதி உலா சென்றாா்.

Updated On : 23 மே 2026, 1:38 am IST
பகிர்:

ஆரணி பெரியகடை வீதி ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோயில் 101-ஆம் ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு சுவாமி நாக வாகனத்தில் வீதி உலா சென்றாா்.

முன்னதாக, இந்தக் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீவரதராஜ பெருமாள் நாக வாகனத்தில் உலா சென்றாா்.

Advertisement

Advertisement

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீகில்லா வரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவ குழுவினா் செய்திருந்தனா்.