முகப்பு
வேலூர்

ஆண்டியப்பனூர் சிறுமி கொலை வழக்கு நேர்மையான விசாரணை கோரி

வாணியம்பாடி அருகேயுள்ள ஆண்டியப்பனூரில் 9 வயது சிறுமி காயத்ரி கொலை வழக்கில் நேர்மையான விசாரணையை நடத்தக் கோரி, காங்கிரஸ் சார்பில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் இம்மாதம் 9ஆம் தேதி முற்றுகையிடப்படும் என இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் விஜய் இளஞ்செழியன் கூறினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

வாணியம்பாடி அருகேயுள்ள ஆண்டியப்பனூரில் 9 வயது சிறுமி காயத்ரி கொலை வழக்கில் நேர்மையான விசாரணையை நடத்தக் கோரி, காங்கிரஸ் சார்பில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் இம்மாதம் 9ஆம் தேதி முற்றுகையிடப்படும் என இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் விஜய் இளஞ்செழியன் கூறினார்.

டிச.27ஆம் தேதி கொலை செய்யப்பட்ட இச்சிறுமியின் பெற்றோர் ராமசந்திரன், கௌரி ஆகியோரை அவரது இல்லத்தில் விஜய் இளஞ்செழியன் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்

இதையடுத்து, அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

சிறுமியின் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சாலை மறியல் செய்ததாக 152 பேர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும்.  சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி, தமிழக ஆளுநரிடம் முறையிடப்படும் என்றார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலர் ரியாஸ் அகமது, மாவட்ட துணைத் தலைவர் பிரபு, நகரத் தலைவர் பொன்.இளங்கோவன், ஒன்றியத் தலைவர்கள் நந்தி (திருப்பத்தூர்), கோவிந்தராஜ் (ஆலங்காயம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →