பேர்ணாம்பட்டு அருகே பாலத்தில் பைக் மோதியதில் மளிகை வியாபாரி இறந்தார்.
ஆம்பூர் பூந்தோட்ட வீதியைச் சேர்ந்தவர் மளிகை வியாபாரி ஏஜாஸ்அஹமது (45). இவர், புதன்கிழமை இரவு அழிஞ்சிகுப்பத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பாலாற்று பாலத்தில் மோதியதில் ஏஜாஸ்அஹமது நிகழ்விடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மேல்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.