முகப்பு
வேலூர்

ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து இறந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து இறந்தார்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் புதன்கிழமை இரவு ஓடும் ரயிலில் ஏறமுயன்று தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை ரயில்வே போலீஸார் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார். 
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →