வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 21) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிப்பதோடு, புதிய திட்டங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அனைத்துத் துறை அதிகாரிகள் பதிலளிக்க இருப்பதால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.