ஆற்காடு நகரில் உள்ள அனுமதி பெறாத வீட்டுமனைப் பிரிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த கூட்டம் ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையர் மாடசாமி தலைமை வகித்தார். நகரமைப்பு அலுவலர் தாமோதரன் முன்னிலை வகித்தார். ஆற்காடு பத்திரப் பதிவு அலுவலர் கார்த்திகேயன் பங்கேற்று, நகரில் உள்ள அனுமதி பெறாத மனைப் பிரிவுகள், அவற்றை முறைப்படுத்தி அரசின் விதிமுறைப்படி, கட்டணம் செலுத்தி அங்கீகாரம் பெற்றுக் கொள்வது குறித்துப் பேசினார்.
கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள், அனுமதி பெற்ற பத்திர எழுத்தர்கள், கட்டட வரைவு அனுமதியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.